இருள் கொண்ட வானில்
பாடல்: இருள் கொண்ட வானில்
படம்: பாகுபலி (தமிழ்)
இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடிக்கோட்டில் முளைக்கும் பாகுபலி
கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சா அமுதா மொழி
வான் விட்டு மகிழ்மதி வாங்கிடவே
அந்த சூரியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி
கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சா அமுத மொழி
அம்பென்றும் குறி மாறியதில்லை
வாள் என்றும் பசி ஆறியதில்லை
முடிவென்றும் பின் வாங்கியதில்லை
தானே.. சேனை.. ஆவார்..
தாயே இவன் தெய்வம் என்பான்
தமையன் தான் தோழன் என்பான்
ஊரே தான் தோழன் என்பான்
தானே.. தேசம்.. ஆவார்
சாசனம் ஏது சிவகாமி சொல்வது
விழி ஒன்றில் இத்தேசம் விழி ஒன்றில்
கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சா அமுதா மொழி
--------------------------------------------------------------------------------------------------------------------------
Irul Konda Vaanil song lyrics in Tamil - Baahubali song lyrics
Comments
Post a Comment