காதல் நேர்கையில் - நிமிர்ந்து நில்
பாடல்: காதல் நேர்கையில்
படம்: நிமிர்ந்து நில்
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனரடி
எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ.. நீ யாரோ... நீ தான் என் ஏவாளோ
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
கூந்தல் வீணை நீ ..கோயில் யானை நான்
உந்தன் கண்களால் ஊரைப் பார்க்கிறேன்
பாறை போல வாழ்ந்த நானே சிற்பம் ஆகிறேன்.
பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன்
உன்னாலே உன்னாலே
என் தேடல் உன்னாலே
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனரடி
எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ.. நீ யாரோ.. நீ தான் என் ஆதாமோ
தேடிப் பார்க்கிறேன் என்னை நானே
தேவை யாவுமே நீயாய் ஆனேன்
--------------------------------------------------------------------------------
Kaadhal nerigaiyill - Nimirndhu nil song lyrics in tamil
Comments
Post a Comment